2024 மே 03, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் ‘பாடுவோர் பாடலாம்’

Editorial   / 2024 பெப்ரவரி 16 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ARS INTERNATIONAL ORCHESTRA  வழங்கும் உலக சாதனையை நோக்கிய 12 மணிநேர தொடர் இசை ஹட்டன்  மாநகரில் பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் வியாழக்கிழமை (15) மாலை இடம்பெற்றது.

அங்கு கருத்து தெரிவித்த  ARS INTERNATIONAL ORCHESTRA வின் தலைவரும் ஸ்தாபகருமான டாக்டர்  Rashmi Roomi, 

“ஹட்டன்  மாநகரில் ‘பாடுவோர் பாடலாம்’ என்ற இசை நிகழ்ச்சி பெப்ரவரி 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கான சகல விதமான  ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 

கடந்த இரண்டு மாதங்களாக பல கட்ட குரல் தேர்வுகள் இடம்பெற்றதுடன் அதிலிருந்து 50 பாடக, படகிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சகலருக்கும் சான்றிதழ்களும் முதல் மூன்று இடங்களை பிடிப்போருக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படும்” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .