2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி – 2013

Kogilavani   / 2013 டிசெம்பர் 14 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இஸெட். ஷாஜஹான்


கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் அகில இலங்கை ரீதியில் நடத்திய  'அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி – 2013' இற்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் தேசிய நூதனசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் எச்.டி..எஸ்.மல்காந்தி, அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரபல சிங்கள எழுத்தாளர் மடுலுகினிய விஜேரத்ன, தமிழ்,சிங்கள நாடகக் கலைஞர்கள்;, எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, தமிழ், சிங்கள மொழிகளில் சிறுகதை, பாடல், கவிதை, சிறுவர் கதை, சித்திரம், குறுநாடகப் பிரதியாக்கம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு விருதுகள், சான்றிதழ்கள், புத்தகப் பரிசுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் ஆக்கங்களின் தொகுப்பாக  'பிரகாசம்'  என்ற நூலும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.

குறுநாடகப் போட்டியில் 'மனவிலங்குகள்' என்ற நாடகம் ஒன்பது விருதுகளைப் பெற்று முதலிடத்தை பெற்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .