2025 ஜூன் 21, சனிக்கிழமை

ரொயிஸ் விஜித்த உட்பட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து உட்பட மூவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரணகமகே நேற்று வெள்ளிகிழமை உத்தரவிட்டார்.

நீர்கொழும்பில் அமைந்துள்ள நகை கடை மற்றும்  வெளிநாட்டு நாணய மாற்று நிலையமொன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மூவரும் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்தக் கொள்ளைச் சம்பவத்தை நடத்திவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற  பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான எபல் ரூவன்  என்று அழைக்கப்படும் நபர் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .