2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்குளியவில் ரூ.5 இலட்சம் கொள்ளை

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 25 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்குளியவில் பெண்ணொருவரிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கொள்ளையடிக்கப்பட்ட அந்த பணத்தை முச்சக்கரவண்டி சாரதியொருவர் கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றி அந்த பெண்மணியிடமே கொடுத்துள்ளார்.

பெண்ணிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டதை அவதானித்த முச்சக்கரவண்டி சாரதி அந்த மூவரையும் துரத்திச்சென்று பணத்தை கொள்ளையர்களிடமிருந்து மீட்டே பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

முச்சக்கரவண்டி  சாரதி கொள்ளையர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கு முயன்றவேளையில் மற்றுமொரு கொள்ளையர் முச்சக்கரவண்டி சாரதியின் மீது துப்பாக்கிப்பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளார்.

அந்த துப்பாக்கிப்பிரயோகம் மற்றுமொரு கொள்ளையர் மீதே பட்டுள்ளது. அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்பதற்காக வங்கியில் பணத்தை பெற்று அடகுநிலையத்திற்கு எடுத்துசென்றுகொண்டிருந்த போதே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .