Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2011 ஜூன் 01 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொலிஸாரை குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொலிஸார் பொறுப்பு இல்லை, அரசாங்கமே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்' என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
உத்தேச தனியார்துறை ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் நேற்றுமுன்தினம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனைக் கண்டித்து கூட்டுத் தொழிற்சங்க முன்னணி கொழும்பு, கோட்டை ரயில்வே நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஜோசப் ஸ்ராலின்; மேலும் தெரிவிக்கையில்,
தனியார்துறை ஊழியர்களுக்காக முன்வைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் தற்காலிகமாகவே இடைநிறுத்தி வைத்துள்ளது. இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தியது. அரசாங்கத்தின் இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையிலேயே நாம் எல்லோரும் இங்கு ஒன்றுகூடியுள்ளோம்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் ஆபத்தான நிலையிலுள்ளார். 200 இற்கும் அதிகமானோர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொலிஸாரை குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொலிஸார் பொறுப்பு இல்லை. அரசாங்கமே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும்
ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக எம்மால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை அரசாங்கம் தடுத்து நிறுத்த முற்படுகிறது. இருப்பினும் நாம் எமது போராட்டத்தை கைவிடமாட்டோம்.
உழைக்கும் வர்க்கத்தினரின்; மீது அரசாங்கம் தாக்குதல்களை முன்னெடுத்தால் நாம் பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்போம்' என்றார். Pix by:Nishal Baduge
Faazil Thursday, 02 June 2011 12:37 AM
ஓஹ் இப்படியும் ஒரு ஆர்ப்பட்டமா!
Reply : 0 0
xlntgson Friday, 03 June 2011 09:31 PM
அப்பாவிகளின் பிணங்களை படிக்கட்டுக்களாக வைத்து ஏறிச் சென்று அமரும் ஆசனமே அரசியல் சிம்மாசனம்!
ஊர்வலங்கள் அமைதியாகத் தான் ஆரம்பிக்கும்!
குளவி கடித்தால் கூட பொறுமையாக இருக்க முடியுமா, ஆயுதம் தாங்கியவர்களுக்கு?
அமைதியாக ஜனநாயக எதிர்ப்பை காட்ட ஊர்வலம் கேட்பவர்கள் யாரேனும் செருப்பை தூக்கி வீசினாலும் அங்கால் போகும் வரும் வாகனங்களை தாக்குவார்கள். இதெல்லாம் அரசியலில் வழமையாகிவிட்டது ஜனநாயகத்துக்கும் கோஷங்களுக்கும் தொடர்பே இல்லாமல் போய் விட்டது agent provacateurs குழப்பக்காரர்களுக்கு வசதி!
பிரச்சார உத்திகள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago