2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நீரோடையில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை பலி

Kogilavani   / 2011 ஜூன் 03 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (ஏ.எச்எம்.பௌஸான்)

மல்வானை காந்தியவலவ்வ பிரதேசத்தில் இரண்டரை  வயது குழந்தையொன்று நீரோடையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

மொஹமட் நுஹைம் என்ற குழந்தையே நீரோடையில் விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தையை காணவில்லையென்று பொலிஸாருக்கு பெற்றோர் முறையிட்டிருந்தனர்.  இதேவேளை வீட்டின் அருகிலிருந்த ஓடையில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் இளைஞர்கள் பலர் ஓடையில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டபோது, குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .