2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'தலைநகர் வாழ் மலையக இளைஞர் காங்கிரஸ்' அங்குரார்ப்பணம்

Super User   / 2011 ஜூன் 14 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனநாயக மக்கள் முன்னணியின் ஒரு பிரிவான தலைநகர் வாழ் மலையக இளைஞர் காங்கிரஸ் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட மாநாட்டின் போதே ஸ்தாபிக்கப்படவுள்ள இந்த பிரிவற்கு மத்திய மாகாண சபை உறுப்பினரும், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளருமான முரளி ரகுநாதன் பொறுப்பாக நியமிக்கப்படவுள்ளார்.

முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கொழும்பு ஜிந்துப்பிட்டி மைதானத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இடதுசாரி முன்னணி மற்றும் ஐக்கிய சோஷலிச கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் விசேட விருந்தினர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .