2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இலங்கை ஆசிரியர்களுக்கு உருது மொழி பயிற்சி: கல்வி அமைச்சின் செயலாளர்

Super User   / 2011 ஜூன் 17 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

இலங்கையிலுள்ள ஆசிரியர்களுக்கு பாகிஸ்தானின் தேசிய மொழியான உருது மொழியை  கற்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.குணவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் 107 இலங்கை மாணவர்களுக்கான ஜின்னா புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நடைமுறையிலுள்ள கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவரவுள்ளதாகவும் இதனடிப்படையில் பாடத்திட்டங்கள், கற்பித்தல் முறைகள் போன்றவற்றில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.

2012 ஆம் ஆண்டு முதல் க.பொ.த. (சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு 3 மாத காலத்திற்குள் தொழிற்பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதே போன்று க.பொ.த. (உ/த) எழுதிய மாணவர்களுக்கும் பயிற்சி தொழிற்பயிற்சி வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த நான்கு வருடத்திற்குள் இலங்கையின் அறிவு மையத்தை விருத்தி செய்வதற்காக 4,400 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாடசாலைகள், ஆசிரிய பயிற்சி நிலையங்கள் போன்ற அபிவிருத்தி செய்யவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் சீமா இலாஹி ஆகியேரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரலயத்தினூடாக பாகிஸ்தான் அரசு ஏழாவது தடவையாக இலங்கை மாணவர்களுக்கு ஜின்னா புலமை பரிசில் வழங்கியது.

நாட்டின் பல பாகங்கலிருந்து தெரிவுசெய்யப்பட்ட க.பொ.த. (சா/த) மற்றும் (உ/த) கல்வி கற்கும் 107 மாணவர்ககுக்கு வருடத்திற்கு 24 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டது.

இதுவரை சுமார் 800 இலங்கை மாணவர்களுக்கு ஜின்னா புலமை பரிசில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix By:Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0

  • manmathan Saturday, 18 June 2011 11:45 AM

    பூர்வீக தமிழ் மொழிக்கே மரியாதை இல்ல இதுல அவர்களின் மொழி வேறயா ?

    Reply : 0       0

    ajan Saturday, 18 June 2011 05:54 PM

    தமிழ் மொழியை தவிர, எல்லா மொழிக்கும் இந்த நாட்டில் முன்னுரிமை
    நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. அதே எங்கள் மொழியையும் அழிக்கவேண்டாம் என்று தான் கேட்கிறோம்.

    Reply : 0       0

    xlntgson Saturday, 18 June 2011 09:29 PM

    ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதனால் கேடு ஒன்றும் இல்லை- வியாபார நிமித்தம் தங்களது மொழி குஜராத்தியானாலும் பாய் சமூகத்தினர் ஆசிய ஒற்றுமை வேண்டி உருது மொழியை வளர்ப்பது நல்லதே- அது ஹிந்தி மொழியின் சகோதர மொழியே-அதைப்போலவே சீக்கியர் தங்கள் மொழி பஞ்சாபாக இருந்தாலும் உருது மொழியை அதன் வளம் காரணமாக வளர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான் உருது மொழியை நேசிக்கின்றேன்; அரபு பாரசீக எழுத்துக்களை பயன்படுத்தாமல் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தினால் நல்லது என்று எண்ணுகின்றேன்.
    நான் ஆங்கில மூலம் உருது படிப்பிப்பேன்

    Reply : 0       0

    IBNU ABOO Sunday, 19 June 2011 02:31 PM

    NAMATHU SONTHA MLOIUDAN ORU ANNIYA MOLIAYUM KATPATHU ORU NANPANAI THUNAIKKU PETRATHUPOLTHYAN .ITHU ORU PAARAADDUKKURIYA MUYATCHI.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .