Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 03 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பாடசாலை நேரத்தை 3 மணிவரை நீடிக்கும் திட்டத்தை கைவிட அப்பாடசாலை அதிபர் மனப்பூர்வமாக இணங்கியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பாடசாலை நேரத்தை பிற்பகல் 1.30 மணியிலிருந்து 3 மணிவரை நீடிக்கும் தீர்மானத்திற்கு பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அக்கல்லூரி அதிபருடன் பெற்றோர் சார்பில் மூவரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரனும் கலந்துரையாடல்களை நடத்தினர்.
இதன்போதே பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பாடசாலை நேரத்தை 3 மணிவரை நீடிப்பதற்கு எடுத்த தீர்மானம் கைவிடப்பட்டு தொடர்ந்து 1.30 மணிவரை பாடசாலையை நடத்த அதிபர் இணக்கம் தெரிவித்தாரெனவும் கலாநிதி குமரகுருபரன் கூறினார்.
இணைக் கலைப்பாட விதானங்களில் மாணவர்களின் பங்களிப்பு குறைவாகக் காணப்பட்டதாகவும் இதனாலேயே பாடசாலை நேரத்தை 3 மணிவரை நடத்துவதற்கு தீர்மானித்ததாகவும் பம்பலப்பிட்டி இராமநாதன் கல்லூரி அதிபர் கூறியதாகவும் குமரகுருபரன் குறிப்பிட்டார்.
இவ்வாறு பாடசாலை நேரத்தை நீடிப்பதால் மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பிலும் மாணவர்களின் சுதந்திரம், ஓய்வுநேரம் பாதிக்கப்படுவது தொடர்பிலும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகும் நிலைமை ஏற்படுமென்பது தொடர்பிலும் இக்கலந்துரையாடலின்போது அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பாடசாலை நேரத்தை 3 மணிவரை நீடிப்பது தொடர்பில் குழப்பமடைந்த பெற்றோர்கள் இன்று செவ்வாய்க்கிழமை அக்கல்லூரி வாயிலில் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபரின் கருத்தை அறிந்துகொள்வதற்காக அவருடன் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனனிக்கவில்லை.
Rajisvaran Tuesday, 03 January 2012 11:55 PM
சிறந்த தீர்மானம். பெற்றோரின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
Reply : 0 0
jeyarajah Wednesday, 04 January 2012 12:58 AM
அதிபர் அவர்களே உங்கள் திறமையை பரீட்சை முடிவுகளில் காட்டுங்கள் .ஜனாதிபதியின் விருது ஏற்புடையதில்லை. அது அரசியல். பிள்ளைகளைப் படிக்க விடுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago