2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தேவாலயங்களுக்கு சஜித் பிரேமதாச நிதியுதவி

A.P.Mathan   / 2013 நவம்பர் 03 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்  
     
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நீர்கொழும்பிலுள்ள இரு தேவாலயங்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா அன்பளிப்பு செய்துள்ளார்.

கடோல்கலேயில் உள்ள தேவதயாவே தேவாலயத்திற்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்து, தேவாலயத்தின் அருட் தந்தை லிப்டன் ஜோசப்பிடம் ஐம்பதாயிரம் ரூபாவுக்கான காசோலையை வழங்கினார்.

இதேவேளை, சாந்த ஜோசப் வீதியில் உள்ள மல்வத்தை தேவாலயத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்து அருட்தந்தை எத்னேஸியஸ் சமரசிங்கவிடம் 50,000 ரூபாவுக்கான காசோலயை வழங்கினார்.

மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்துவின் ஏற்பாட்டில் நடந்த இவ்விரு நிகழ்வுகளிலும் நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து, உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .