2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பில் தெங்கு சார் கைப்பணிகள் மாநாடு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 04 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


தெங்கு தும்பு மற்றும் துகழ்கள் சார்ந்த மெருகூட்டப்பட்டதும் பெறுமதி சேர்க்கப்பட்டதுமான கைப்பணித்துறை சார்ந்த மாநாடு இன்று திங்கட்கிழமை (04) காலை நீர்கொழும்பு ஜெட்வின் ஹோட்டல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

தெங்கு அபிவிருத்தி தொடர்பில் திறைசேரியின் பிரதி செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ். படகொட அவர்களால் அறிக்கை இந்நிகழ்வில் சமர்ப்பிக்கப்பட்டது.

தெங்கு தும்பு மற்றும் துகழ்கள் சார்ந்த கைப்பணித்துறை வளர்ச்சி தொடர்பில் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிமல் சோமவீர உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர்களான விக்டர் அன்ரனி பெரேரா, லக்ஸ்மன் வசந்த பெரேராவும், தன்சானியா, இந்தியா, இலங்கை, பிரேசில், இத்தாலி, மலேசியா, இந்தோனேசியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், சீனா, கொரியா, தாய்லாந்து உட்பட பல நாடுகளைச் சேர்ந்த துறைசார் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .