2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கொழும்பில் பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வு

Super User   / 2013 நவம்பர் 19 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீன் ஒருமைப்பாட்டு தின நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி புதன்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இலங்கை பலஸ்தீன் ஒருமைப்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டிலான இந்த நிகழ்வு கொழும்பு – 07இ விஜயராமயிலுள்ள உள்ள ஹெக்டர் கோப்பேகடுவ நிலையத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் இராஜதந்திரியும் சமூக ஆய்வளருமான கலாநிதி தயான் ஜயதிலக சிறப்பு உரையாற்றவுள்ளார்.

சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி திஸ்ஸ விதாரன மற்றும் இலங்கைக்கான பஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அஹா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .