2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியிலுள்ள பாரிய குழியால் மக்கள் விசனம்

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதி, டிப்போ சந்தி அருகில் சிலாபம் நோக்கிச் செல்லும்பிரதான வீதியின் நடுப்பகுதியில் பாரிய குழி ஒன்று ஏற்பட்டு வாகன சாரதிகளுக்கு அச்சுறுத்தலாகவும் விபத்துக்கள் ஏற்படும் இடமாகவும் மாறியுள்ளது.

தண்ணீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு இந்த குழி ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த ஒருவார காலமாக இந்நிலையில் பிரதான வீதி காணப்படுவதாகவும் பிரதேசவாசிகளும் வாகன சாரதிகளும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

இந்த இடத்தில் இரவு நேரங்களில் வெளிச்சமின்மை காணப்படுவதால் விபத்துக்கள் அதிகம் இடம்பெறுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பாரிய விபத்து நிகழ்ந்து உயிரிழப்புக்கள் ஏற்படும் முன்னர் உரிய அதிகாரிகள் வீதியில் ஏறபட்டுள்ள இந்த மரண குழியை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதேசவாசிகளினதும் வாகன சாரதிகளினதும் கோரிக்கையாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .