2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மருதானையில் விபசார விடுதி முற்றுகை; நால்வர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 27 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை, சங்கராஜ மாவத்தையில் விபசார விடுதியொன்றை நடத்திவந்ததாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் நால்வரை வலன பொலிஸ் குற்றச்செயல் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட விசேட தேடுதல் பிடியாணையைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்விடுதியின் முகாமையாளரும் பெண்கள் மூவருமே கைதுசெய்யப்பட்டு வாழைத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இச்சந்தேக நபர்கள் பாசறை, மொனராகலை, வலப்பன, ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர்கள் நால்வரும்  மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், இவ்விடுதியின் முகாமையாளருக்கு 02 மில்லியன் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒவ்வொரு பெண்ணுக்கும் 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .