2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பாக். பெண் கைதியின் பிள்ளைகளை பிரிக்க வேண்டாம்: நீதிமன்றம்

Super User   / 2013 டிசெம்பர் 03 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

ஹெரோயின் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் பெண் கைதியின் பிள்ளைகளை தாயிடமிருந்து பிரிக்காமல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து விமானம் மூலம் உடம்பினுள் மறைத்து வைத்து ஹெரோயின் கடத்தி வந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தினால் அவருக்கு கடந்த புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த பெண் கைதியை கைதிகள் பரிமாற்று உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்கு அனுப்பும் வரை, கைதியின் இரு பிள்ளைகளையும் தாயிடமிருந்து பிரிக்காமல் இலங்கை சிறைச்சாலையொன்றில் வைக்க முடியுமா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு  சிறைச்சாலை அதிகாரிக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் உத்தரவிட்டார்.

ஆயுள் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்ட போது கைதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.பி.எம்.மாஹிர் நீதிமன்றில் விடுத்த வேண்டுகோளை ஆராய்ந்த நீதவான் நேற்று திங்கட்கிழமை இந்த விடயம்  நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.

பாகிஸ்தான், லாகூர் நகரை சேர்ந்த தபிந்;தா சிக்ரா முஹம்மத் காலித் (32 வயது) என்ற இரு பிள்ளைகளின் தாயாரே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவராவார். இவருக்கு மூன்று வயது பெண் குழந்தையும் ஐந்து வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.

பிரதிவாதியான அந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் 2011 அக்டோபர் 24 ஆம் திகதி 113.8 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை விழுங்கி வந்த நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணையின் போது குற்றவாளியாக காணப்பட்டதை அடுத்து, பிரதிவாதிக்கு கடந்த புதன்கிழமை ஆயுள் தண்டனை வி;திக்கப்பட்டது.

பிரதிவாதியின் பிள்ளைகள் தொடர்பில் சிறைச்சாலை அதிகார சபை நீதிமன்றத்திடம் வினவிய போதே பிரதிவாதியை பாகிஸ்தான்- இலங்கைக்கு இடையிலான கைதிகள் பறிமாற்ற உடன்படிக்கையின் கீழ் பாகிஸ்தானுக்கு அனுப்பும் வரையில் இரு பிள்ளைகளையும் தாயிடமிருந்து பிரிக்காமல் இலங்கை சிறைச்சாலையொன்றில் வைக்க முடியுமா என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு  சிறைச்சாலை அதிகாரிக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .