2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

களனி பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

17 வயதான சிறுமியொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முனைந்த குற்றச்சாட்டின் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் மில்ரோய் பெரேராவை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி.அமரசிங்க நாளை புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த வியாழனன்று விருந்துபசார நிகழ்வொன்று கந்தானை, உஸ்வத்த வீதியில் உள்ள சந்தேக நபரின்  வீட்டில்; ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் மேல் மாடியில் உற்சவம் நடந்துள்ளது. வீட்டின் கீழ் பகுதியில் குடும்பத்தினருடன் சிறுமி இருந்த போது, குடிபோதையில் இருந்த பிரதேச சபை உறுப்பினர் சிறுமியை மேல் மாடிக்கு அழைத்து சிறுமியுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

இதனை அடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பில் கந்தானை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர். சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்தார் என்று பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே கந்தானை பிரதேசத்தை வதிவிடமாக் கொண்ட களனி பிரதேச சபை உறுப்பினரான மில்ரோய் பெரேரா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனை அடுத்து சந்தேக நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .