
இலங்கையில் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய செயற்திட்டமொன்று இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இரு சமூகத்தினரிடையேயும் நல்லிணகத்தை ஏற்படுத்துவது நோக்கமாக அமைந்துள்ளது.
இந்த திட்டத்தின் அறிமுக நிகழ்வு கொழும்பு ஹில்டன் ரெசிடென்சிஸ் ஹோட்டலில், இந்த திட்டத்தின் ஏற்பாட்டாளர் சங்கைக்குரிய பேராசிரியர் கும்புருபிட்டியே வஜிர தேரர் மற்றும் முஸ்லிம் விவகார செயற்பாடுகளின் தலைவர் கலாநிதி அப்துல் காதர் மஷுர் மௌலானா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இந்த நிகழ்வில் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் தமித்த விக்ரமசிங்க, செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் டி.எம்.ஜி. அமரபந்து மற்றும் மேலும் பல விசேட அதிதிகள் பங்குபற்றியிருந்தனர்.
1948ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர், இலங்கையின் அரசியல் தலைமைத்துவமானது, சமூகங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த தவறியிருந்தன. எனவே, நாடு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் உறுதியற்ற நிலையை எதிர்நோக்கியிருந்தது. இந்த நிலையை ஆழமாக ஆராய்ந்து பார்த்து, அவற்றுக்கு தீர்வுகளை காணும் வகையில் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டுக்கான இலங்கை தேசிய திட்டம் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
2013ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து ஆழமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தாரிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த நடைமுறை சாத்தியமான தீர்வுகளை முன்னெடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. சிங்கள – முஸ்லிம் மக்களிடையே பாரம்பரியமாக காணப்பட்ட ஒருமைப்பாட்டை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை தூண்டும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதுடன், உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் கீர்த்தி நாமத்தை சீர்குலைக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை சீர்குலைக்கும் வகையிலும் செயற்படவுள்ளது.
பெரும்பான்மை சமூகத்தினர் கடந்த காலத்தில் அதிகளவு ஆதிக்கத்தை செலுத்தியிருந்ததையும், சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டிருந்தமையும் கடந்த கால உதாரணங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. இதன் வெளிப்பாடாக, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வேறுபாடுகள் அவர்களின் தலையில் ஊடுருவியிருந்தது. மேலும், சிறுபான்மையினர், அவர்களின் உரிமைகளிலிருந்தும், மொழி, குடியுரிமை, சிறுபான்மை உரிமைகள், காணி, நேர்மை, தொழில் வாய்ப்புகள், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற சகல விடயங்களிலும் பின்தள்ளப்பட்டிருந்தனர்.
இந்த வேறுபாடுகள் காலப்போக்கில் சமூக போராட்டமாக மாறி, இலங்கையின் கீர்த்தி நாமத்துக்கு குந்தகம் விளைவிக்கம் வகையில் அமைந்திருந்தன. பெருமளவான வெளிநாடுகள் இலங்கையை அதன் சமூக கொள்கைகள் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட இவை காரணமாக அமைந்தன. இந்த நிலை படிப்படியாக உயர்வடைந்து நாட்டின் கீர்த்தி நாமத்துக்கு சர்வதேச ரீதியில் பாரியளவில் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனாலும், தற்போதைய நாட்டின் தலைமைத்துவம் நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்திருந்தது. இதன் மூலம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கீர்த்தி நாமத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. மேலும், கல்வியறிவை மேம்படுத்துவது, பசுமையை ஏற்படுத்துவது, வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு, உட்கட்டமைப்பு விருத்தி, வெளிநாட்டு முதலீடுகள், மனித வள அபிவிருத்தி மற்றும் பொருளாதார உறுதிப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனாலும் சில குறுகிய இலாபங்களை நோக்காக கொண்ட சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்பாடுகள் நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றன. இதன் காரணமாக சிங்கள – முஸ்லிம் சமூகத்தினரிடையே இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெற்றிருந்தன. தற்போது மிகவும் சிறியளவில் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. சில சுயஇலாபம் தேடும் அமைப்புகள் இந்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இரு சமூகங்களுக்கிடையிலும் இடைவெளியை ஏற்படுத்தி சுயலாபம் தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சர்வதேச சமூகத்துக்கு இதுபோன்ற செயற்பாடுகள் 'இலங்கை என்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தான ஒரு நாடு' எனும் ஆபத்தான செய்தி ஒன்றை கொண்டு செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளன. நாட்டுக்கும், பொருளாதாரத்துக்கும், சமூகத்துக்கும், அரசியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே இந்த புதிய 'சிங்கள – முஸ்லிம் ஒருமைப்பாட்டு திட்டம்' இரு சமூகங்களுக்கிடையிலும் இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் மக்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகளுக்கு எதிராக தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். அனைத்து இனங்களை சேர்ந்தவர்களும் ஒருமைப்பாட்டுடன் வசிக்கும் நாடாக இலங்கையை மாற்றுவது இந்த அமைப்பின் நோக்கமாகும்.
சமூகங்களுக்கிடையில் சமய மற்றும் இன ரீதியான வேறுபாடுகளை இல்லாமல் செய்து இலங்கையை அனைவரும் வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான நாடாக மாற்றுவதுடன், அனைவரும் சம உரிமையுடன் வசிப்பதற்கான நாடாக மாற்றியமைப்பது இந்த திட்டத்தின் இலக்காக அமைந்துள்ளது. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களை பலப்படுத்தி நாட்டை வளமாக்குவது திடமான நோக்கமாகும்.
நிலையான அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் சமய மற்றும் இன வேறுபாட்டை இல்லாமல் செய்வதற்கு மிகுந்த முக்கியத்துவத்துடன் செயலாற்றுவது பிரதானமானதாக அமைந்துள்ளது. ஒருமைப்பாட்டுடன் காணப்படும் சமூகமொன்று அரசியல், சமய மற்றும் இன மாறுபாடுகளின் ஊடுருவல்களின் காரணமாக சீர்குலைக்கப்படக்கூடும். இதற்கு சிறந்த உதாரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைக் காலத்தில் காணப்பட்ட அமைதியற்ற சூழ்நிலையை குறிப்பிட முடியும். எனவே எந்தவொரு சமூகத்திலும் இன மற்றும் மத பாகுபாட்டை ஏற்படுத்தும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து, அனைத்து சமூகங்களிடையேயும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவது அனைத்து நபர்களினதும், அரசாங்கத்தினதும் பொறுப்பாகும்.