2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தெஹிவளையில் புதிய அஹதியா பாடசாலை ஆரம்பம்

Super User   / 2014 பெப்ரவரி 02 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அஹதியா சம்மேளனத்தின் வழிகாட்டலின் கீழ் தெஹிவளை தெற்கு பிரதேசத்திற்கான புதிய அஹதியா பாடசாலை இன்று இல.16 பள்ளிதொர வீதியில் அமைந்துள்ள நோம்ஸ் கல்லூரி கட்டிட வளாகத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

முஸ்லிம் சிறார்களுக்கு சன்மார்க்க அறிவையும் நல்லொழுக்கத்தையும் வழங்குவதை நோக்காகக் கொண்டு அஹதியா பாடசாலைகள் நடாத்தப்படுகின்றன.இவை நாளைய தலைமுறையை சன்மார்க்க அறிவுடனும் தெளிவுடனும் வாழப் பயிற்றுவிக்கின்றன.

இந்த வகையில் தெஹிவளை தெற்கு அஹதியா பாடசாலைக்கு தமது பிள்ளைகளை சேர்த்துக் கொள்வதற்கு ஆர்வமுள்ள பெற்றோர் நோம்ஸ் கல்லூரியில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை இல.16, நோம்ஸ் கல்லூரி, பள்ளிதொர வீதி என்ற முகவரிக்கு தபால் மூலமாவோ அல்லது நேரிலோ பதிவுகளை மேற்கொள்ளமுடியும்.

அஹதியா பாடசாலையின் பாடங்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0112737077, 0774686686 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ள முடியும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .