2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீலங்கன் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் பிரிட்டன் அங்குரார்ப்பணம்

Super User   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களினால் ஸ்ரீலங்கன் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் பிரிட்டன் எனும் அமைப்பொன்று அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கவுன்ஸின் அங்குரார்ப்பணக் கூட்டமொன்று அண்மையில் பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெற்றுள்ளது. இதன்போது அமைப்பின் தலைவராக முகம்மட் சமீமும் பொதுச் செயலாளராக அப்ஹாம் இஸ்மாயிலும் தவிசாளராக நசீம் மன்சூரும் ஊடக இணைப்பாளராக சியாத் கபூர் ஆகியோருடன் செயற்குழுவொன்றும் தெரிவுசெய்யப்பட்டது.

இலங்கை வாழ் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை, கல்வி மேம்பாடு, நிர்வாக சேவையில் முஸ்லிம்களின் பங்குபற்றல், இலங்கை வாழ் முஸ்லிம்களின் எதிர்காலம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது என அமைப்பின் ஊடக இணைப்பாளராக சியாத் கபூர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் இனங்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கான பொதுவான இலக்கை நோக்கி பயணித்தல் ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து ஸ்ரீலங்கன் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் பிரிட்டன் செயற்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவின் லண்டன் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் வாழும் இலங்கையர்களையும் இதில் உள்வாங்கவுள்ளதாக சியாத் கபூர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .