2026 மார்ச் 19, வியாழக்கிழமை

ஐ.ம.மு குரல் ஓயாது: கே.ரி.குருசாமி

Kanagaraj   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது இலக்கினை எட்டுவதற்காக வடமாகான சபைத் தேர்தல்களின்  போது தமிழ் மக்கள் எவ்வாறு தமது ஒற்றுமையையும் உணர்வையும் வெளிப்படுத்தி நின்றனரோ அந்த யுக்தியை பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பம் ஒன்று மேல் மாகாண தமிழ் மக்களுக்கும் கிடைத்திருப்பதாக  தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் கே.ரி. குருசாமி தமிழ் மக்களுக்காக எமது முன்னணி கொடுக்கும் குரல் ஓயாது என்றும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் குருசாமி விடுத்துள்ள செய்தியில் மேலும் கூறிள்ளதாவது,

அமரர் சந்திரசேகரன் மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் ஆகியோர் எனது அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளம் இட்டவர்கள் என்பதை நன்றியுடன் நினைவுகூர்கின்ற அதேவேளை மலையக மக்கள் முன்னணியின் கொழும்புக்கிளையின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதையடுத்தே எனது பணியினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக ஜனநாயக மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டேன்.

இது ஒரு தீர்க்கதரிசனமான முடிவு என்று கூறினாலும் இது மிகையாகாது. கடந்த 15 வருடங்களாக கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக இருந்து இயன்றளவிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றேன் அதற்கான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுத்த நல் உள்ளங்களுக்கு தலை வணங்கி நன்றி செலுத்துகிறேன்.
எனது கடந்த கால மக்கள் பணிகளை இரட்டிப்பாக்கும் இலக்கிலேயே தலைவர் மனோகணேசனின் வழிக்காட்டலின் கீழும் ஆலோசனையின் அடிப்படையிலும் மேல்மாகாண சபைத் தேர்தல் களத்தில் குதித்துள்ளேன்.

தலை நகரில் வாழும் தமிழ் மக்களின் தேவைகளை அறிந்து நாடு முழுவதும் வாழும் தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து செயற்படுகின்ற ஜனநாயக மக்கள் முன்னணியும் அதன் தலைமையும் தமிழரின் காவல் அரணாகவே இருக்கும் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

நடைபெறவிருக்கும் தேர்தல் தலைநகருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு ஒரு சவாலான தேர்தலாகவும் இதனைக் கருத முடிகின்றது. வடமகாண சபைக்கான தேர்தல்களின் போது அரசாங்கத்தின் ஆலவட்டங்களையும் அரசில் ஒட்டிக்கொண்டிருபோரின் நகர்வுகளையும ; நாம்  கண்டிருந்தோம். எனினும்  அங்கு வாழ்கின்ற எமது உறவுகள் எவ்வாறு தமது ஒற்றுமையை உலகுக்கு எடுத்துக்காட்டினர் என்பது உணரப்பட்ட விடயமாகும்.

அந்த ஒற்றுமையும் உணர்வும் தலைநகர் தமிழ் மக்களாகிய எமக்கும் இருக்கின்றது என்பதை வரும் மேல் மாகான சபைத் தேர்தல் மூலம் நிரூபித்துக்காட்ட வேண்டும். தமிழரின் தோழனாய் திகழும் மனோ தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச்செய்யுமாறு கரம் குவித்துக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X