2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

செல்வாக்கு மிக்க தலைவர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2014 மார்ச் 09 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


சமாதானத்தையும், சகவாழ்வையும் முன்னெடுத்து செல்லும் செல்வாக்கு மிக்க தலைவர்களுக்கான இரண்டு நாள் வதிவிட செயலமர்வு  7,8ஆம்  திகதிகளில் கொழும்பு ஒருமைப்பாட்டுக்கான நிலையத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் நடாத்தப்பட்ட இந்த  செயலமர்வில் பன்மைத்துவம், சகவாழ்வு, சமூகவியல், சட்டங்கள்; போன்ற தலைப்புக்களில் விரிவுரை மற்றும் குழு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன்  இதில்  26 பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் நிகழ்சித்திட்ட உத்தியோகத்தர் திருமதி லெய்லா உடையாரின் ஒருங்கிணைப்பில், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஸ்தாபக இணைப்பாளர் திருமதி ஜெசிமா இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில்; வளவாலர்களாக  ஊடகவியலாளரும் ஆய்வாளருமான றவூப் செயின்,  ஆய்வாளரும் பயிற்றுவிப்பாளருமான  எம்.எம்.எ.தஹ்லான் உட்பட அமைப்பின் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .