2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தமிழர் முன்னேற்றக் கழகம் அங்குரார்ப்பணம்

A.P.Mathan   / 2014 மார்ச் 10 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


திக்கற்று, நாதியற்று சுழன்று திரியும் சுழல்காற்றுப்போல் தமிழர் தம் வாழ்வை தொலைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அவர்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு உதயமாகியிருக்கிறது 'தமிழர் முன்னேற்றக் கழகம்'.

சரியான வழிநடத்தலில்லாது தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அரசியல், கல்வி, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழ் மக்கள் கொடிகட்டிப் பறந்தாலும் பின்தங்கிய மட்டத்திலிருக்கும் தமிழ் மக்கள் இன்னமும் தவறான வழிநடத்தலினால் சீரழித்து வருகிறார்கள். இவர்களுக்கு இன்றைய உடனடி தேவையாக அமைந்திருப்பது சரியான வழிநடத்தல்தான். அந்த அற்புதமான வழிநடத்தனை ஏற்க வந்திருப்பதே 'தமிழர் முன்னேற்றக் கழகம்'.

அரசியல் ரீதியான அணுகுமுறைகள் இப்பொழுது தமிழ் மக்களை மையமாகக் கொண்டே சுழன்று வருகிறது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மக்களும், விரும்பியோ விரும்பாமலோ அரசியலின் பின்னால் செல்லவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால், தமது கல்வி, பொருளாதாரம், கலை – கலாசாரம் என்ற அபிவிருத்தியை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் சரியான வழிநடத்தலை தவறவிடுகின்ற பல கசப்பான சம்பவங்களை நம் தமிழ் மக்கள் சந்தித்திருக்கிறார்கள்.

வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடங்கள் ஏராளம். சரியான பாதையை நமக்குக் காட்டத் தவறினால், காட்டாறாய் திசைமாறிய பலரது வாழ்க்கையை நாம் வாழ்நாளில் பார்த்திருக்கிறோம். அப்படியான திசைமாறல்கள் ஒருபோதும் நம் மக்களுக்கு வரக்கூடாது.

ஒரு சுமூகமான வாழ்வை எம் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் சரியான வழிநடத்தல் தேவைப்படும். அந்த வழிநடத்தலை சரியான முறையில் நாம் வழங்கினாலே சமூகத்தின் முன்னேற்றம் தானாக அமைந்துவிடும்.

வெறுமனே அரசியல் பேசுவதால் மட்டும் தமிழ் மக்களின் அபிவிருத்தி இலகுவாகக் கிடைத்துவிடும் என பகல்கனவு காணக்கூடாது. தமிழ் மக்களின் அபிவிருத்தி என்பது அடிமட்டத்திலிருந்து வரவேண்டும். குறிப்பாக கல்வி அபிவிருத்தி என்பது இன்றியமையாதது. அடிப்படை கல்வி அபிவிருத்தி என்பது சரியான முறையில் அமையவேண்டும். அத்தோடு கலை, கலாசார அபிவிருத்தி என்பதும் மிகவும் முக்கியமானது. சமூகத்தில் ஏற்படுகின்ற கலாசார சீரழிவுகளை தடுப்பதற்கு கலை, கலாசார அபிவிருத்தி பற்றி தெளிவினை மக்களுக்குள் ஏற்படுத்த வேண்டும். புறச்சூழல் காரணமாக ஏற்படுகின்ற கலாசார சீரழிவுகளை தடுப்பதற்கு நாம் வழங்கும் வழிகாட்டல் சிறப்பானதாக அமைய வேண்டும்.

அடுத்ததாக பொருளாதார அபிவிருத்தி என்பது இன்றைய தமிழர்களின் உயிர்நாடியாக இருக்கிறது. வடக்கு, கிழக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்கள் கஷ்டகாலங்களிலேயே தமது பொருளாதார தேடலை விடாமல் தொடர்ந்தவர்கள். இவர்களுக்கு இன்றைய காலத்தில் சரியான வழிநடத்தல் கிடைக்குமானால் நிச்சயமாக பொருளாதார அபிவிருத்தியில் தமிழ் மக்கள் தலைசிறந்து விளங்குவார்கள்.

ஆகா மொத்தத்தில் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலை – கலாசாரம் போன்ற அபிவிருத்திகளை தமிழ் மக்கள் பெரிதும் விரும்பிகிறார்கள் என்பது மட்டுமல்லாமல் அவர்களின் அவசிய, இன்றைய தேவையாக இருப்பதும் அதுவொன்றே என்பது திண்ணம். ஆகையினால், தமிழ் மக்களின் உணர்வினை புரிந்து, தமிழர் முன்னேற்றக் கழகம் செயற்படத் தொடங்கியிருக்கிறது என அக்கழகத்தின் பிரதான அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவித்தார்..


அவருடனான நேர்காணலின் முழு விபரம் வருமாறு...

கேள்வி: இன்றைய சூழலில் தமிழர் முன்னேற்றக் கழகம் உருவாக்க வேண்டும் என்பதன் நோக்கம் என்ன?

பதில்: சரியான வழிநடத்தலில்லாது தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அரசியல், கல்வி, பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழ் மக்கள் கொடிகட்டிப் பறந்தாலும் பின்தங்கிய மட்டத்திலிருக்கும் தமிழ் மக்கள் இன்னமும் தவறான வழிநடத்தலினால் சீரழித்து வருகிறார்கள். இவர்களுக்கு இன்றைய உடனடி தேவையாக அமைந்திருப்பது சரியான வழிநடத்தல்தான். அந்த அற்புதமான வழிநடத்தனை ஏற்பதற்காகத்தான் 'தமிழர் முன்னேற்றக் கழகம்' உருவாக்கப்பட்டது.

அரசியல் ரீதியான அணுகுமுறைகள் இப்பொழுது தமிழ் மக்களை மையமாகக் கொண்டே சுழன்று வருகிறது. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மக்களும், விரும்பியோ விரும்பாமலோ அரசியலின் பின்னால் செல்லவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால், தமது கல்வி, பொருளாதாரம், கலை – கலாசாரம் என்ற அபிவிருத்தியை சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லும் சரியான வழிநடத்தலை தவறவிடுகின்ற பல கசப்பான சம்பவங்களை நம் தமிழ் மக்கள் சந்தித்திருக்கிறார்கள்.

வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடங்கள் ஏராளம். சரியான பாதையை நமக்குக் காட்டத் தவறினால், காட்டாறாய் திசைமாறிய பலரது வாழ்க்கையை நாம் வாழ்நாளில் பார்த்திருக்கிறோம். அப்படியான திசைமாறல்கள் ஒருபோதும் நம் மக்களுக்கு வரக்கூடாது.

ஒரு சுமூகமான வாழ்வை எம் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் சரியான வழிநடத்தல் தேவைப்படும். அந்த வழிநடத்தலை சரியான முறையில் நாம் வழங்கினாலே சமூகத்தின் முன்னேற்றம் தானாக அமைந்துவிடும்.

கேள்வி: இக்கழகத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றன?


பதில்: எமது கழகத்தின் செயற்பாடுகள் பிரதானமாக கல்வியினை மையப்படுத்தியே இருக்கும். முதலாவதாக, பொது அறிவினை வழங்கக்கூடிய கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இதனூடான சுய அறிவினை தமிழ் மக்கள் விருத்தி செய்யக்கூடியதாக இருக்கும். இரண்டாவதாக, ஒரு சமூகத்தின் குறிகாட்டியாக இருக்கின்ற கலாசாரத்தினை தெளிவுபடுத்தும் கலாசார கல்வியை வழங்கவுள்ளோம். இதனூடாக ஒரு சமூகம் தனது குறிகாட்சியான கலாசாரத்தை விளங்கி நடக்கக்கூடிய அறிவினைப் பெற்றுக்கொள்வார்கள். அடுத்ததாக, தமது இருப்பினை நிலைநிறுத்தக்கூடிய அரசியல் பற்றிய கல்வியை வழங்கவுள்ளோம். இதனூடாக தமிழ் மக்கள், தமது இருப்பினை நிலைநிறுத்தும் அரசியல் கல்வி பற்றிய தெளிவினைப் பெற்றுக்கொள்வார்கள்.

ஆகமொத்தத்தில் அடிப்படை அறிவினை தமிழ்மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே எமது குறிக்கோளாக அமையும். இந்த பிரதான மூன்று கல்வி அறிவினையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே எமது உயிர்நாடியாக இருக்கும்.


கேள்வி: இக்கழகத்திற்கு அரசியல் பின்னணி ஏதாவது இருக்கிறதா?

பதில்: ஒரு கழகம் உதயமாகினால் முதலில் எழுகின்ற கேள்விகள், இதன் பின்னணியில் அரசியல் இருக்கிறதா? நிதி எங்கிருந்து கிடைக்கிறது போன்றவைதான். எமது கழகத்தினைப் பொறுத்தமட்டில் இது, தமிழரால் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கழகம். நேரடியாக இதில் எந்த அரசியலும் உள்வாங்கப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய தலைமுறைக்கு அரசியல் கல்வியை வழங்கக்கூடிய அமைப்பாக இது செயற்படும். அரசியல் தெளிவினை தமிழ் மக்களுக்கு அரசியல் கல்வியூடாக வழங்குவோம்.

கேள்வி: உங்களுடைய கழக அங்குரார்ப்பண வைபவத்திற்கு அரசியல்வாதிகளை ஏன் அழைக்கவில்லை?

பதில்: நான் முன்னர் கூறியதுபோல் தமிழரால் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டதே தமிழர் முன்னேற்றக் கழகம். இது எங்களுடைய ஒரு கன்னி முயற்சி. இதன் ஆரம்பத்தில் நிறைகளும் இருக்கலாம், குறைகளும் இருக்கலாம். இந்த நிறை, குறைகளில் அரசியல்வாதிகள் தலையிட்டு, அவர்களின் அரசியல் வாழ்வை சங்கடத்திற்குள் தள்ள நாங்கள் முனையவில்லை. ஆகையினால்தான் எந்தவித அரசியல்வாதிகளையும் நாங்கள் அங்குரார்ப்பண வைபவத்திற்கு அழைக்கவில்லை.

கேள்வி: அப்படியானால் அரசியல்வாதிகளுக்கு உங்களின் கழகத்தில் இடமில்லையா?

பதில்: அப்படிச் சொல்லவில்லை. எந்தவொரு அரசியல்வாதியும் எமது கழகத்தில் உறுப்பினராகலாம். தமது அரசியலை பிரஸ்தாபிக்காமல் தமிழ் மக்களின் குறை, நிறைகளில் பங்கேற்கும் நல்ல முயற்சியில் எம்மோடு அவர்கள் கைகோர்க்கலாம். அவர்களது அரசியல் வாழ்வினை பாதிக்காதவிதத்தில் எம்மோடு அவர்கள் கைகோர்ப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.


கேள்வி: இக்கழகத்தினூடாக தமிழ் மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு நிதியுதவி வழங்குவீர்களா?

பதில்: எமது கழகம் அனைத்து பிரதேசங்களிலும், கிராமங்களிலும் கிளைகளை நிறுவும். அங்குள்ள எமது பிரதிநிதிகள், குறித்த பிரதேசத்தின் தேவைகள் பற்றி தகவல் திரட்டுவார்கள். இதனை ஆராய்ந்து தேவையான நேரத்தில், தேவைகளை உணர்ந்து, தேவையான உதவிகளை நாங்கள் வழங்குவோம். அது நிதியாகவோ, பொருளாகவோ, பயிற்சிப்பட்டறைகளாகவோ அமையலாம். எனினும், எமது பிரதான இலக்கு, பயிற்சிப்பட்டறைகளை உருவாக்கி சிறந்த கல்வி அறிவினை தமிழ் மக்களுக்கு வழங்கி, அதனூடாக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்வதேயாகும்.

கேள்வி: இதில் உறுப்பினர்களாக இணைபவர்களுக்கான நிபந்தனைகள் எதுவும் இருக்கிறதா?

பதில்: இலங்கையின் தமிழர்கள் என்ற அடையாளம் ஒன்றே போதுமானது. இது தமிழரால் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட கழகம் என ஏற்கனவே குறிப்பிட்டேன். அதற்கமைய ஒவ்வொரு இலங்கை தமிழனும் எமது கழக உறுப்பினர்கள்தான். அந்த அங்கிகாரத்தினை நாங்கள் அவர்களுக்கு வழங்கிவிட்டோம். எனினும் உங்களது தெரிவினை எங்களுக்கு tmkilankai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவோ அல்லது 0114343340 என்ற தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்துவதனூடாகவோ உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

கேள்வி: புலம்பெயர் தமிழர்களும் உள்வாங்கப்படுவார்களா?

பதில்: நிச்சயமாக அவர்கள் இலங்கை தமிழர்களாக இருந்தால் உள்வாங்கப்படுவார்கள். அவர்களது உதவியும் எமக்கு கண்டிப்பாக தேவை.


கேள்வி: இங்கு தமிழர் என்னும் பதம் எதனைக் குறிக்கிறது?

பதில்: தமிழர் பண்பினை மதிக்கின்ற அனைவரும் தமிழர் என்ற பதத்தினையே இது குறிக்கிறது. இது ஓர் இனம் சார்ந்த அமைப்பல்ல. தமிழர் பண்பாட்டை மதிக்கின்ற, தமிழ் பேசும் முஸ்லிம்கள், மலையக தமிழர்கள், களுத்துறை மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழர்கள் என அனைவரும் தமிழர்கள் என்ற பார்வையிலேயே நாங்கள் பார்க்கின்றோம்.




You May Also Like

  Comments - 0

  • thiru Monday, 10 March 2014 06:29 PM

    இது ஒரு நல்ல ஆரம்பம். அரசியல் நோக்கம் இல்லாமல் கொள்கை பற்றுடன் செயற்படும் வரை, எமக்கு தெரிந்த கழகங்கள் எல்லாம் பணம் சம்பந்த விடயங்கள் கையாள முற்படுகையில் பல இடர்பாடுகளை சந்தித்து இருக்கிறது. அதுவரையில் அந்த நாள் வரையில் எப்படி மக்களின் நம்பிக்கையை காப்பாற்றி வெற்றி நடை போடுவது என்பது எதிகாலத்தை முடிவு செய்யும்! வாழ்க வெல்க, வெற்றி தமிழ் மக்களுக்கே...!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .