2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பாணந்துறையில் மூதாட்டியின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 மார்ச் 18 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை, வலானையில் கைகள்,கால்கள் கட்டப்பட்ட நிலையில் 72 வயதான மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் மாவட்ட வைத்தியசாலை அதிகாரியின் மனைவியான இவர் சுவர்ணா தல்பத்தாது என்று இனங்காணப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவருடைய மகனும் மருமகளும் காலை 6.30 மணிக்கு வேலைக்குச்சென்றிருந்தவேளையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் வீட்டின் திருத்த வேளையில் ஈடுபட்டி இருவரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அலுமாரி உடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் சடலத்திற்கு அருகில் வயரொன்றும் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .