2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கல்வியின் மகிமை மக்களுக்கு புரிகின்றது: பிரபா எம்.பி

Kogilavani   / 2014 மார்ச் 26 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்து அபிவிருத்தி செய்தால் மக்களின் வாக்குகள் கிடைக்காது. அதற்கு பதிலாக கூரை தகடுகளையும் தையல் இயந்திரங்களை வழங்கினால் பல ஆயிரக்கணக்கான வாக்குகளைப் பெறலாம் என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால் இங்கு கொழும்பிலும் சரி, தோட்டப் புறங்களிலும் சரி  தொடர்மாடி குடியிருப்பாளர்களை சந்திக்கும் போதும் சரி அவர்கள் தரும் ஆதரவினை பார்க்கும் பொழுது கல்வியின் மகிமை மக்களுக்கு இன்று தெளிவாக புரிகின்றது' என தெமட்டகொட வேலுவன பாதையிலுள்ள தோட்டப்புற மக்கள் மத்தியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் பொழுது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக என்னால் ஒதுக்கப்பட்ட பலகோடி ரூபாய் நிதியினூடாக கொழும்பிலுள்ள தோட்டங்களுக்கு கொங்;ரீட் பாதை போட்டு இலவச தையல் இயந்திரம், கூரைத்தகடு, எரிவாயு அடுப்பு போன்றவற்றை கொடுத்திருந்தால் இன்று எனக்கு கிடைக்க இருக்கும் வாக்குகளை விட அதிகமான வாக்குகளை பெற்றிருக்கலாம்.

ஆனால் வாக்குகளுக்காக மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய முடியாததினால் நான் கல்வித்துறையை பாரிய அளவிலே அபிவிருத்தி செய்துள்ளேன். இன்று நான் பிரசாரத்திற்கு எங்கு சென்றாலும் மக்களை விட அவர்களது பிள்ளைகளே என்னை அடையாளங் கண்டு கொள்கின்றார்கள்.

தங்களது பாடசாலையில் என் கையால் பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். இவர்கள் தான் பெற்றோர்களுக்கு உடனடியாக என்னை அறிமுகப்படுத்தி வைக்கின்றார்கள். இதைப் பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் திருப்தியாக இருக்கின்றது. கல்வியின் மகிமையை புரிந்து கொண்ட பல பெற்றோர்கள் அணிதிரண்டு மயில் சின்னத்திற்கும் எனது வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க தயாராக இருக்கின்றார்கள்.

இன்று மக்கள் சேவை செய்யாதவர்கள் ஏராளமான ஊடக அறிக்கைளை அனுப்பியும் பல இலட்சக்கணக்hன ரூபாய்களை செலவழித்து விளம்பரம் செய்வதிலும் பெரிய மேடை அமைத்து இன்னிசை கச்சேரிகளை நடத்தியுமே மக்களிடமிருந்து வாக்குகளை பெற முயற்சிக்கின்றார்கள். ஆனால் நான் செய்ததை சொல்லியே வாக்குகளை கேட்கின்றேன்.

எனது வேட்பாளர்களுக்கு  அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் உங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும். கொழும்பு மாவட்ட தமிழர்கள் தமது வாக்குகளை சிந்தித்து பிரித்து வாக்களித்தால் அனைத்து தரப்பிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .