2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

புகையிரதத்தில் மோதுண்டு மருத்துவபீட மாணவி பலி

Kogilavani   / 2014 மார்ச் 29 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் மருத்துவப்பீடமாணவி (வயது 22)ஒருவர் வெள்ளிக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை இராமகிருஷ்ன வீதிக்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாத்தறையிலிருந்து  அனுராதபுரத்தை நோக்கி பயணித்துகொண்டிருந்த புகையிரதத்தில் மோதியே மேற்படி மாணவி உயிரிழந்துள்ளார்.

இவருடைய தந்தைபொறளை,லேடி ரிஜ்;வே மருத்துவமனையில்சத்திரசிகிச்சi நிபுணராக பணிபுரிவதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .