2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கைத்தொழில் மேம்பாடு; டக்ளஸ் - றிஷாட் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


கழிவு உலோகங்களை தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கி அதனூடாக கைத்தொழிற்துறையை மேம்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அமைச்சர் றிசாட் பதியூதீனுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

கொழும்பு, மருதானையில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் வியாழக்கிழமை  (03) மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான குறித்த நிறுவனங்களுக்கு ஊடாக கழிவு உலோகங்களிலிருந்து கைத்தொழிற்துறையை சக்திப்படுத்தி வலுப்படுத்தும் வகையிலான செயற்திட்டங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் கழிவு உலோகங்களை மூலப்பொருட்களாகக் கொண்டு செய்யப்படும் உற்பத்திகளின் தரம் மற்றும் அவற்றின் சந்தைவாய்ப்பு தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதியூதீன், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகர் தவராசா உடனிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .