2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நூல்கள் திருடிய மூவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு,  கடுவெல்லேகம பிரதேசத்திலுள்ள  ஆடைத்  தொழிற்சாலையொன்றிலிருந்து திருடப்பட்ட 500,000 ரூபா பெறுமதியான  நூல்களுடன் சந்தேகத்தின் பேரில் மூவரை வெள்ளிக்கிழமை (04) கைதுசெய்துள்ளதாக  நீர்கொழும்பு பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் சிறிது காலமாக நூல்கள் திருட்டுப்போவதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மேற்படி ஆடைத் தொக்ழிற்சாலையின் களஞ்சிய செயற்;பாட்டாளர், லொறிச் சாரதி உள்ளிட்ட மூவரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

முதலில்  களஞ்சிய செயற்;பாட்டாளரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் ஏனைய இருவரையும் கைதுசெய்யப்பட்டனர்.

ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான நூல்களே மேற்படி ஆடைத் தொழிற்சாலையிலிருந்து திருடப்பட்டவை என்பதுடன், மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள்; வேறு ஆடைத் தொழிற்சாலைகளிலிருந்து  திருடப்பட்டவையாகும் என விசாரணையின்போது தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .