2025 ஜூன் 21, சனிக்கிழமை

கொழும்பு மாவட்ட மகளிர் பாடசாலைகளுக்கு ரூபா ஒரு கோடியோ பத்து இலட்சம் நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2014 ஜூன் 28 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

"கொழும்பு மாவட்டத்திலுள்ள தனி மகளிர் பாடசாலைகளின் அபிவிருத்தியை முன்நிறுத்தி இடம்பெற்ற ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கல்விப் பிரிவின் முடிவுக்கமைய ரூபா ஒரு கோடியே பத்து இலட்சத்து ஐம்பதாயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஊடகப்பிரிவு   தெரிவித்துள்ளது.

இவ்விடயம் குறித்து ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கருத்து தெரிவிக்கையில்,

"அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கமைய கொழும்பு மாவட்டத்திலுள்ள மகளிர் பாடசாலைகளுக்கு பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெறுமனே கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளுக்கு வருடத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கிடுவதன் மூலமாக எவ்வித பிரயோஜனமும் இல்லை. இதனடிப்படையிலேயே இம்முறை பாரியளவு நிதி ஒதுக்குவதற்கு முடிவு எடுத்துள்ளோம்.

இது தொடர்ப்பில் மேலம் அவர் குறிப்பிடுகையில்,

"அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கிடைக்கப்பெற்ற மூன்று கோடி நிதியிலும், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவர் என்ற முறையில் கிடைக்கப்பெற்றுள்ள ஒன்பது கோடி நிதியிலும் பாடசாலை அபிவிருத்திகளுக்கு மீண்டும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற எனது ஆலோசனையை ஜனநாயக மக்கள் காங்கிரஸின் கல்விப் பிரிவு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இதனடிப்படையில் புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயத்தை 1யுடீ பாடசாலையாக தரமுயர்த்தி விஞ்ஞான கூட கட்டிடத்தை அமைப்பதற்காக ரூபா 60 இலட்சமும், கணபதி மகளிர் மகா வித்தியாலயத்தின் முற்றலுக்கு கார்ப்பெட் இடப்பட்டு கூடைப்பந்தாட்ட திடல் அமைப்பதற்கு ரூபா 27 இலட்சமும் தேசிய பாடசாலையான இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் கட்டிட தேவைக்காக ரூபா 15 இலட்சமும் கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா வித்தியாலயத்தின் வகுப்பறைகளின் தரைகளை செப்பனிடுவதற்கும் முகப்பில் கொங்ரீட் இடுவதற்கும் ரூபா 6 இலட்சத்து ஐம்பதாயிரமும், பிரஸ்பெடீரியன் மகளிர் மகாவித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தின் கூரை திருத்துவதற்கு ரூபா 2 இலட்சம் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏனைய பாடசாலைகளுக்கும் நிதி ஒதுக்குவது தொடர்பாக  விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். கல்வித் துறையை மேலும் முன்னெடுப்பதற்காக ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எமது கல்விப் பிரிவின் செயலாளர் எம்.பிருதிவிராஜ்வுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக ஜக்கிய மக்கள் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .