2025 ஜூன் 21, சனிக்கிழமை

மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் மேற்கின் உதயசூரியன்: மனோ

Thipaan   / 2014 செப்டெம்பர் 07 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மனோ கணேசன்

மேற்கில் அமைந்துள்ள எங்கள் தலைநகரை தளமாக கொண்டு எங்கள் மலையகத்துக்கு அறிவொளி பாய்ச்சுவதால், மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தை, மேற்கில் உதித்துள்ள உதயசூரியன் என்றால் மிகையாகாது என  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் நேற்று (06) தெரிவித்துள்ளார்.

எட்டு வருட நிறைவை கொண்டாடும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தை வாழ்த்தி விடுத்துள்ள செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்து செய்தியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

துடிப்புள்ள மன்றத்து இளைய உடன்பிறப்புகளையும் உணர்வுள்ள போஷக நண்பர்களையும் ஒருசேர மனதார வாழ்த்துகின்றேன்.

மலையகம், இந்நாட்டில்  பிற்படுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரு வலயம். மலையக பின்னடைவுகளை வரிசைப்படுத்தினால் முதலாவது கல்வி, இரண்டாவது கல்வி, மூன்றாவதும் கல்வியே.

இதை சரியாக எட்டு வருடங்களுக்கு முன்னரே அடையாளம் கண்டுகொண்டு, பின் தங்கிய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக,  ஒரு அரசு செய்யவேண்டியதை, அரசு சார்பற்ற அமைப்பாக இருந்துக்கொண்டு, செய்து வரும் தம்பிமார்களையும் அண்ணன்மார்களையும் வாழ்த்துகின்றேன்.

எங்கள் தலைநகரை தளமாக கொண்டு பணியாற்றும் இந்த மன்றத்தை, பாராட்டுவதிலும் வாழ்த்துவதிலும்  தலைநகரத்து தமிழர்களின் பெருவாரி ஜனநாயக ஆதரவை பெற்றுள்ள கட்சியின் தலைவன் என்ற முறையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .