2025 ஜூன் 21, சனிக்கிழமை

உணவு விஷமான விவகாரம்: ஊழியர்களிடம் விசாரணை

George   / 2014 செப்டெம்பர் 10 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


கட்டுநாயக்க  ஆடை தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் பாதிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை 16 பேரும், புதன்கிழமை இரண்டு பேருமாக 18 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்;கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் பிரதி வைத்திய அதிகாரி  தெரிவித்தார்.

இதேவேளை, செவ்வாய்க்கிழமை காலை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கட்டுநாயக்கா ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை, நீர்கொழும்பு பொது சுகாரதார அதிகாரிகள் வைத்தியசாலைக்குச சென்று சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதேவேளை, குறித்த குறித்த ஆடை தொழிற்சாலைக்கு உணவை விநியோகித்து வந்த நீர்கொழுமபில்; உள்ள நிறுவனத்திற்கு சென்ற பொது சுகாரதார அதிகாரிகள், அங்கு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதுடன், உணவு விஷமான சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகள் முடிவடைந்து, அதன்  அறிக்கை கிடைக்கும் வரை சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள  தொழிற்சாலைகளுக்கு உணவு வழங்குவதை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளனர்

பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களில் ஒருவர்  தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (7) உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .