2025 ஜூன் 21, சனிக்கிழமை

சென். செபஸ்தியன் கல்லூரியின் அதிபரை பதவியேற்ககோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


- எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு, சென்.செபஸ்தியன் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நிலங்கா த சில்வாவை மீண்டும் பதவியேற்குமாறு  கோரி  பெற்றோர்கள்  திங்கட்கிழமை (15) காலை  கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் காலை 8 மணிமுதல் முற்பகல் 10 மணி வரை முன்னெடுக்கப்படு;ட்டது. இதன்போது நீர்கொழும்பு பொலிஸார் பாதுகாப்பு பணியில் .

இது தொடர்பாக பெற்றோர்கள் கருத்து தெரிவிவக்கையில்,

குறித்த அதிபர்; திறமையாக பணியாற்றி கல்லூரியின் வளர்ச்சிக்கு பாரியளவில் பங்களிப்பு செய்தார்.

கடந்த  ஆகஸ்ட் மாதம்  24 ஆம் திகதி   கல்லூரியின் வாயில் கதவு பூட்டை உடைத்து, நீர்கொழும்பு வலயக் கல்வி அதிகாரி  கத்தோலிக்க அறநெறி பாடசாலையை நடத்த அனுமதி அளிததிருந்தார்.

குறித்த விடயம் தொடர்ப்பில், கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நிலங்கா த சில்வா ஆகஸ்ட் மாதம்  24 ஆம் திகதி,   வலயக் கல்வி அதிகாரக்கு எதிராக  நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில்   முறைப்பாடு செய்தார்.

இந்நிலையில், மூன்றாம் தவணைக்காக கல்லூரி திறக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில்  அதிபர் கல்லூரிக்கு சமூகமளிக்கவில்லை. தற்போது கல்லூரியின்  உப அதிபரே பதில் அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

இது தொடர்ப்பில் வலய கல்வி அதிகாரிகளிடம் வினவியபோது,

குறித்த கல்லூரியின் அதிபர் தற்போது விடுமுறையில் உள்ளார். அவர் தனது கடமையை மீண்டும் பொறுப்பேற்பதில் தடையேதும் இல்லை. அவர் வலய கல்வி அதிகாரிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து தவறிழைததுள்ளார் என தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .