2025 ஜூன் 21, சனிக்கிழமை

டெங்கு பரிசோதனை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவருக்கு பிணை

Thipaan   / 2014 செப்டெம்பர் 22 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு மாநகரசபையின்  பொது சுகாதார பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் டெங்கு நுளம்பு பரிசோதனைக்காக சென்ற போது அவர்களை தாக்கிய சந்தேகநபரை ஐயாயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான்  திலகரத்ன பண்டார, இன்று(22) உத்தரவிட்டார்.

மூன்றாம் குரணை, ஸ்ரீவிக்ரம ராஜசிங்க வீதியில் உள்ள வீடொன்றில் குறித்த ஊழியர்கள் சோதனை நடத்தியபோது தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த ஊழியர்கள் 42 வீடுகளை பரிசோதனை செய்துவிட்டு 43ஆவது வீட்டுக்கு செல்லும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக  ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தரான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் உடற் கட்டழகர் என்று தெரியவருகிறது.

கைது செயயப்பட்டுள்ள நபர் விலங்கு பண்ணை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.  பரிசோதனையின் போது அந்த வீட்டில் நுளம்பு குடம்பிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நுளம்பு குடம்பி இருப்பதாக  ஊழியர் ஒருவர் கூறியதை அடுத்து சந்தேக நபர் பிளாஸ்ரிக் குழாய் ஒன்றை எடுத்து ஊழியர்களை தாக்கியுள்ளார்.
இதன் போது ஒரு ஊழியர் தப்பியோட, இருவர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .