2025 ஜூன் 21, சனிக்கிழமை

டெங்கு விவகாரம்: ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் மீது தாக்குதல்

Thipaan   / 2014 செப்டெம்பர் 23 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு மாநகர சபையின்  பொது சுகாதார பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள்  நேற்று டெங்கு நுளம்பு பரிசோதனைக்காக சென்ற போது; தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, நீர்கொழும்பு மாநகர சபையின் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.

இவ் ஆர்ப்பாட்டமானது இன்று காலை 7 மணி முதல்  9 மணி வரை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்ட இடத்துக்கு நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீர, பிரதி மேயர் எம்.எஸ்.எம். சகாவுல்லா ஆகியோர் சென்று ஊழியர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊழியர்கள் மேயரிடம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து  சந்தேக நபர் மேயரின் காரியாலயத்துக்;கு அழைத்து வரப்பட்டார்.இதனை அடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

பொலிஸ் அதிகாரி ஒருவர்  சந்தேக நபரை மாநகர சபை மண்டபத்தின் மறுபக்க வாயில் வழியாக (வெளியேறும் வாயில்) பாதுகாப்பாக அழைத்துச் சென்றதை அறிந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டோர்  வெளியேறும் பகுதியில் வைத்து பொலிஸ் அதிகாரியின் முன்பாகவே தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காயங்களுக்கு உள்ளான சந்தேக நபர் பொலிஸ் ஜீப் வண்டியில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .