Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்ணம்
களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, மீறிஜிகலை தோட்ட ஸ்ரீ. முத்துமாரியம்மன் ஆலயத்தில் இயங்கி வரும் "வித்தியாஷினி அறநெறி பாடசாலை" செருந்துணை நாயனாரின் குருபூஜை மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம், கடந்த 13ஆம் திகதி, காலை 9 மணிக்கு, ஆலய மண்டபத்தில் அதன் பொறுப்பாளர் ச. சுவேந்திரன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதன்போது, இந்து சமய கலைக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளுடன் சமய சொற்பொழிவுகள் மற்றும் அறநெறி பாடசாலை மாணவ-மாணவிகளுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் இடம்பெற்றது. இவ்வைபவத்தில், பிரதேச ஆர்வலர்களும், சமயத் தொண்டர்களும், வித்தியா அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதேச இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். 

4 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
22 Dec 2025