2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சான்றிதழ் வழங்கும் வைபவம்

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்ணம்

களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட,  மீறிஜிகலை  தோட்ட  ஸ்ரீ. முத்துமாரியம்மன் ஆலயத்தில் இயங்கி வரும்  "வித்தியாஷினி அறநெறி பாடசாலை"  செருந்துணை நாயனாரின் குருபூஜை   மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம், கடந்த   13ஆம் திகதி, காலை 9 மணிக்கு, ஆலய மண்டபத்தில் அதன் பொறுப்பாளர் ச. சுவேந்திரன் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதன்போது, இந்து சமய  கலைக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கலை  நிகழ்ச்சிகளுடன் சமய சொற்பொழிவுகள் மற்றும்  அறநெறி பாடசாலை மாணவ-மாணவிகளுக்கான  சான்றிதழ் வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.  இவ்வைபவத்தில்,   பிரதேச ஆர்வலர்களும், சமயத் தொண்டர்களும்,  வித்தியா அறக்கட்டளை  நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரதேச இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .