2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேவாலய கைக்குண்டு: பிரதான சந்தேகநபர் சிக்கினார்

Freelancer   / 2022 ஜனவரி 15 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் வெடிகுண்டு போன்ற வடிவிலான கைக்குண்டை வைத்ததாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் எம்பிலிப்பிட்டிய, பனாமுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டு வைக்க அவருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணத்தை வழங்கிய நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்

கடந்த 11ஆம் திகதி குறித்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X