2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மும்தாஜ் படுகொலை: பிரதான சந்தேகநபர் சிக்கினார்

Editorial   / 2021 நவம்பர் 09 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்த மாபிம வீதியில் குப்பைத்தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாளிகாவத்தையைச் ​சேர்ந்த 44 வயதான பாத்திமா மும்தாஜின் படுகொலைத் தொடர்பில், பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலைச் செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், வைத்திருந்த பணம், ப​டுகொலைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உலக்கை, சடலத்தை எடுத்துச் சென்ற ஓட்டோ உள்ளிட்டவையும் மீட்கப்பட்டுள்ளன சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி ஜோடியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரமே பிரதான சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண் அணிந்திருந்த நகைகளில் தங்க சங்கிலி, இரண்டு தோடுகள், தங்க மோதிரம் சந்தேகநபரான பெண்ணினால், கொழும்பு-11, செட்டித்தெருவிலுள்ள தங்க நகைக்கடையில்  1 இலட்சத்து 69 ஆயிரத்துக்கு விற்றப்பட்டுள்ளது. அந்த நகைகள் யாவும் உருக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, இவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X