Editorial / 2021 நவம்பர் 09 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்த மாபிம வீதியில் குப்பைத்தொட்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாளிகாவத்தையைச் சேர்ந்த 44 வயதான பாத்திமா மும்தாஜின் படுகொலைத் தொடர்பில், பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
படுகொலைச் செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், வைத்திருந்த பணம், படுகொலைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உலக்கை, சடலத்தை எடுத்துச் சென்ற ஓட்டோ உள்ளிட்டவையும் மீட்கப்பட்டுள்ளன சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி ஜோடியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரமே பிரதான சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண் அணிந்திருந்த நகைகளில் தங்க சங்கிலி, இரண்டு தோடுகள், தங்க மோதிரம் சந்தேகநபரான பெண்ணினால், கொழும்பு-11, செட்டித்தெருவிலுள்ள தங்க நகைக்கடையில் 1 இலட்சத்து 69 ஆயிரத்துக்கு விற்றப்பட்டுள்ளது. அந்த நகைகள் யாவும் உருக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, இவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago