2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வைத்தியசாலையில் தங்கியிருந்த கைதி மரணம்

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

களுத்துறை-ஜாவத்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், நேற்று (20) உயிரிழந்துள்ளாரென, களுத்துறை வடக்குப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

​மேற்படி கைதி, சட்டவிரோத மதுபான உற்பத்தியுடன் தொடர்புடைய சம்பவம் தொடர்பில், கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்படவே,  அவரை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், களுத்துறை வடக்கு பொ லிஸார் மற்றும் நாகொட வைத்தியசாலை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .