2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

'புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பாளர்களின் தேடல் -2012' கண்காட்சி

Kogilavani   / 2012 நவம்பர் 06 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி)

இளம் கண்டு பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 'புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பாளர்களின் தேடல் -2012' எனும் தொனிப்பொருளிலான கண்காட்சியொன்று யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

எலோட் கணினி நிறுவனத்தில் ஏற்பாட்டில், நிறுவன இயக்குனர் பி.ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.

இக்கண்காட்சியில், மாவட்டத்தில் இருந்து 25 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, இம்மாணவர்களது புதிய கண்டுபிடிப்புகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

விண்வெளி ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் விண்வெளிக்கலம், மிதிவெடி அகற்றும் புதிய கருவிகள், உட்பட பல்வேறு புதிய கருவிகள் இதன்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன், தனியார் நிறுவனங்களின் புதிய கண்டு பிடிப்புக்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

இக்கண்காட்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளதுடன், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புதிய கண்டுபிடிப்புக்களில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட மாணவனுக்கு பணப்பரிசில் வழங்கப்படவுள்ளதாக எலோட் நிறுவன இயக்குனர் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .