2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழில் 4 இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்

Kogilavani   / 2013 நவம்பர் 26 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா, எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

யாழில் ஜனாதிபதியின் பதாகைகளை சேதமாக்கிய குற்றச்சாட்டில் 4 இளைஞர்கள் மீது திங்கட்கிழமை (25) இரவு இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தெல்லிப்பளை பிரதேசத்தில் ஜனாதிபதியின் பதாகைகள் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு சரிந்திருந்தமையைக் காரணம் காட்டியே இந்த இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி 4 இளைஞர்களையும் இராணுவத்தினர் தெல்லிப்பளை பொலிஸாரிடம் கையளித்துள்ளனர்.இச்சம்பம்வ தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த நான்கு இளைஞர்களையும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் வவுனியாவிற்கு கொண்டுசெல்லப்படுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .