2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 53 பேருக்கும் விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 20 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்திய மீனவர்கள் 53 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டார்.

மேற்படி மீனவர்கள் 53 பேரையும்  ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (20) ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த  உத்தரவைப் பிறப்பித்தார்.

தமிழ்நாட்டின் தஞ்சாவூர், காரைக்கால், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச்; சேர்ந்த மேற்படி மீனவர்கள் 53 பேரையும் 13 படகுகளுடன் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் புதன்கிழமை (19) கைதுசெய்த  கடற்படையினர், யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும்  நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

தஞ்சை மாவட்டத்திலிருந்து 10 ரோலர் படகுகளில் வந்த 34 மீனவர்களும் காரைக்கால் பகுதியிலிருந்து 02 படகுகளில் வந்த 15 மீனவர்களும் புதுக்கோட்டையிலிருந்து 01 படகில் வந்த 04 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .