2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அச்சுவேலியில் பட்டப்பகலில் கொள்ளை

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

அச்சுவேலி, தோப்பு பகுதியில் பூட்டியிருந்த வீட்டை குடைத்து பெறுமதியான பொருட்களும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றிகிழமை அச்சுவேலி தோப்பில் உள்ள இராச வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றுக்காலை வீட்டில் இருந்த அனைவரும் செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவிற்குச் சென்ற சமயம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 269000 ரூபா பெறுமதியான உடமைகளும் 26 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .