2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

கொலை தொடர்பான சந்தேகநபர்கள் ஆறு பேர் விடுதலை

Super User   / 2012 நவம்பர் 06 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் இன்று  செவ்வாய்க்கிழமை யாழ். மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஊரெழு வடக்கை  சேர்ந்த வைத்தி தில்லையம்பலம் என்பவரை கடந்த 27 ஜனவரி 2004 இல் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 6 பேர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்றினால் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பின்னர் 27 ஒக்டோபர் 2006ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப் பத்திரத்தினை தொடந்து யாழ். மேல் நீதிமன்றில் ஆறு பேர் மீதான  தொடர் விசாரணைகள் இடம்பெற்றன.   மேற்படி வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றஞ்சாட்டப்பட்பவர்கள் சார்பில் சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா ஆஜராகியிருந்தார். அரசு சார்பில் அரச சட்டத்தரணி நளினி கந்தசாமி ஆஜராகியிருந்தார்.

சட்டத்தரணிகளின் தொகுப்புரையின் பின்னர், ஆறு பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்படாமையினால் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் ஆறு பேரையும் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .