2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கைக்கு தேவையற்ற ஒன்று: மஹிந்த ஹத்துருசிங்க

Kogilavani   / 2013 மார்ச் 17 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

ஜெனிவா கூட்டத்தொடர் இலங்கை அரசிற்கு தேவையற்ற ஒன்று என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

'சில அரசியல்வாதிகள் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தினையும், பாதுகாப்பு படையினரினதும் குற்றம் குறைகளை காண்பதிலேயே முழு மூச்சாக இருக்கின்றார்கள். கடந்த 30 வருட  இருண்ட இலங்கையையும், கடந்த 3 வருடங்களின் பின்னரான இலங்கையையும் நாம் அனைவரும் ஒருமுறை நினைத்துப்பார்க்க வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.

கோப்பாய் பிரதேச செயலத்திட்குட்பட்ட புத்தூர் கிழக்கு பகுதியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்போது நாம் வாழும் அமைதியான சூழல் எப்படி வந்தது என எண்ணிப்பார்க்க வேண்டும். நாமும் எமது அரசாங்கமும் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு, அபிவிருத்தி, பாடசாலை, மருத்துவமனை, வீதி, என சகல விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றோம். அத்துடன், அம்மக்களுக்காக அர்ப்பணிப்புடன், செயலாற்றும் இவ்வேளையில், மிக சிறிய குழுவினர் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பல வெளிநாட்டவர்களின் உந்துதலினாலும்  எமக்கு எதிராக பல பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார்கள்.

'காணி சுவிகரிப்பு நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுப்படவில்லை. காணி சுவீகரிப்பில் இராணுவம் ஈடுபட்டு வருவதாக சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்' என்று யாழ்.மாவட்ட பாதுபாப்பு படைகளின் கட்டடைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

'30 வருட யுத்தத்தில் இருந்து மக்களை மீட்டெடுத்து கடந்த நான்கு வருடங்களாக இராணுவத்தினர் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கல்வி, மருத்துவம், வீடமைப்பு போன்ற அபிவிருத்திப்பணிகளில் பங்கெடுத்து வருகின்றனர். மக்களின் வாக்குகளில் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்காக என்ன அபிவிருத்திப் பணிகளை செய்திருக்கின்றார்கள் என்று நான் கேள்வி கேட்க விரும்புகிறேன்?

ஜெனீவாக் கூட்டத்திற்கு இங்குள்ள அரசியல் வாதிகள் சிலர் சென்று தேவையற்ற கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஜெனீவா சென்று செலவுசெய்யும் பணத்தினை பிரயோசனமாக மக்களின் அபிவருத்திக்குப் பயன்டுத்தி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்தத முன்வரவேண்டும' என்றார்.

இதேவேளை, 'விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட மக்கள் இராணுவத்தினருடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணிவருகின்றனர்.

இந்தவகையில் 'இராணுவம் என்ற செய்கிறது' என்றும் 'இராணுவம் நில அபகரிப்பில் ஈடுபடுவதாகவும்' சிலர் வாந்திகளை பரப்பி வருகின்றனர்.

இராணுவம் அவ்வாறான நிலஅபகரிப்பு செயற்பாடுகளை செய்யவில்லை. இவ்வாறான பாதகமான கருத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.

அத்துடன் தற்போதுள்ள சமாதான சூழலில் வாழந்து வரும் நாங்கள் சிலரின் தப்பான எண்ணங்களில் இருந்து விடுபட்டு சாதகமான விடயங்கள்
பற்றி சிந்திக்க வேண்டும்' என்று குறிப்பிட்டார்.

  Comments - 0

  • aj Sunday, 17 March 2013 07:26 AM

    ஆம் இன அழிப்பு செய்த உங்களுக்கு தேவை இல்லை. இன அழிப்புக்கு உள்ளான மக்கள் என்ற வகையில் எங்களுக்கு தேவை உள்ளது. நீதி, தீர்வு அற்ற அமைதி நிரந்தரம் இல்லை என்பதை ஏனோ இவர்கள் உணவரவில்லை. இந்த கோஷ்டி முழுக்க பொய் சொல்லுவதில் வல்லவர்கள் என்பது அமைச்சர் சமரசிங்க முதல் கோத்த என்று இந்த ஹதுரசிங்க வரை எல்லாம் ஓஒன்று என்பது இவரின் பேச்சில் தெரிகிறது. முழுக்க ராணுவ மையத்தில் இருக்கும் வடக்கில் யார் என்ன பேசமுடியும்?

    Reply : 0       0

    M.A.A.Rasheed Monday, 18 March 2013 08:12 AM

    இது ராணுவ பேச்சு. அப்படியானால் உலக தொடர்புகளை தவிர்க்க வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X