2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யாழில் தாக்குதல்; ஒருவர் காயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்,சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பு நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகளை ஏற்றிச்சென்ற பஃரல்  வாகத்தை இடைமறித்த  முகமூடி நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அந்த வாகனத்தின் சாரதியை தாக்கியுள்ளனர்.

இச்சம்வம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முகமூடி அணிந்தவாறு மோட்டார் சைக்கிலில் வருகை தந்த ஆயுதம் தரித்தவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த வாகனத்தின் சாரதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .