2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நகைக்கடையில் இருமுறை திருடிய பெண்கள் மடக்கி பிடிப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

யாழ். நகர்ப்பகுதியில் உள்ள பிரபல நகை வியாபார நிலையமொன்றில் நகை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் வியாபார நிலைய ஊழியர்களினால் மடக்கி மடக்கிப் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு பிடிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மேற்படி நகைக்கடைக்கு திங்கட்கிழமை (30) சென்ற குறித்த பெண்கள் இரண்டு பவுண் தங்கச் சங்கிலியினைத் திருட முற்பட்ட வேளை வியாபார நிலைய ஊழியர்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் அதே வியாபார நிலையத்தில் இடம்பெற்ற நெக்லஸ் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்கள் இந்த இரண்டு பெண்களுமே என்ற விடயம், வியாபார நிலைய பாதுகாப்புக் கமராவின் பதிவினை பார்த்தபோது தெரியவந்தது.

யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இரு பெண்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .