2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் இருவர் காயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 01 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் கணவன், மனைவியாக அரச ஊழியர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசியரான எஸ்.நந்தகுமார், அவரது மனைவியான உடுவில் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ந.யாழினி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்;று கொண்டிருநதுள்ளனார்.

இதேநேரம் அவர்களுக்கு பின்னாள் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அவர்களது மோட்டார் சைக்கிளில் மோதியதினாலே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இருவரில் மனைவி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், கணவன் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துச் சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .