2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ரோந்து சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 02 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்.ஆணைக்கோட்டை பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இன்றிரவு 10 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதிரோந்து சென்ற இரண்டு பொலிஸார்கள் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதில் மாத்தளை சேர்ந்த வசந்த அபேரத்ன (வயது37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .