2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸார் மீது வாள்வெட்டு: எண்மர் கைது

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மீது வாள்வெட்டு மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் 8 பேரை கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை (2) இரவு வேளையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவரை வழிமறித்து சோதனையில் ஈடுபடுத்திய போது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த  இளைஞர்கள் எண்மரை பொலிஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டதாகவும் அவர்களை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .