2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி தற்காலிகமாக பணி நீக்கம்?

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட்டை பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். ஆணைக்கோட்டைப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை (2) இரவு பொலிஸ் கான்டபிள் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் வாள் வெட்டிக்கு இலக்காகியிருந்தார்.

இச்சம்பவத்தினை தொடர்ந்தே நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி கடமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

பொலிஸ் ரோந்து நடவடிக்கைக்கு 5 பேர் கொண்ட குழுவினரை நியமிப்பது வழக்கம், ஆனால், அன்றைய தினம் பொலிஸ் ரோந்து நடவடிக்கைக்கு 3 பேர் கொண்ட குழுவினரை மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி நியமித்துள்ளார்.

இதனைக் கண்டித்தே, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தரவின் பேரில், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண மானிப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி மல்கம் பேட்டையை தற்காலிகமாக பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .