2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி முன்னிலையிலேயே விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

ஓய்வுபெற்ற நீதியரசரும் வட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளவருமான  சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வட மாகாண சபையின் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  

இவரது பதவியேற்பு நிகழ்வு  அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

  • suda Friday, 04 October 2013 11:48 AM

    இதற்குத்தானே ஆசைப்பாட்டாய் பாலகுமார….

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .